×

ஆடி கிருத்திகை விழா திருத்தணிக்கு சிறப்பு பஸ்

திருவள்ளூர், ஜூலை 23: திருத்தணி ஆடி கிருத்திகை விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை உற்சவம் நாளை (24ம் தேதி) முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி திருத்தணிக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யார், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, போரூர், ஆரணி, வேலூர், ஆற்காடு, திருவள்ளுர், சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலிருந்து திருத்தணிக்கு மேற்கண்ட நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்