×

கூட்டுறவு கடன் சங்க முறைகேடு மேல்புறத்தில் பா.ஜ ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம், ஜூலை 23: பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், புதிய சங்க உறுப்பினர்களை சேர்க்க கேட்டும், தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்க கேட்டும், இதற்கு நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரை பணிநீக்க செய்ய கேட்டும் பாஜ கட்சியினர் மேல்புறத்தில் உள்ள பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, பாகோடு மண்டல் தலைவர் பாபு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். கோட்ட பொறுப்பாளர் தர்ம
ராஜ், மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி உள்பட கட்சியினர் திரளாக
கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...