×

அருந்ததியர் காலனிக்கு அடிப்படை வசதி கேட்டு மனு

விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாத்துநாயக்கன்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரஸ்வதி, சூரியன், லட்சுமி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாத்துநாயக்கன்பட்டி அருந்ததியர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் மகளிர் சுகாதார வளாகம், தண்ணீர் மேல்நிலைத்தொட்டி, மயானம், வாறுகால் வசதி, தெருவிளக்குகள் இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...