×

திருமங்கலம் அருகே கரடிக்கல்லில் போதை டிரைவரால் வீட்டிற்குள் புகுந்த லாரி

திருமங்கலம், ஜூலை 23: திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் மது அருந்தி ஒட்டிய டிரைவரால் லாரி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.திண்டுக்கலில் இருந்து விருதுநகர் நோக்கி சோழவந்தான் வழியாக நேற்று முன்தினம் இரவு டாரஸ் லாரி வந்தது. திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் கரடிக்கல் கிராமத்தில் உள்ள எஸ் வளைவில் வந்த போது டிரைவர் வண்டியை வளைக்காமல் நேரடியாக இயக்கவே லாரி வாறுகாலை தாண்டி அங்குள்ள நல்லமாயன் என்பவரது வீட்டின் சுவரை இடித்து நின்றது. நல்லவேளையாக அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இதனால் உயிரிழப்புகள் எதுவுமில்லை. லாரி மோதிய வேகத்தில் திரண்ட கிராமமக்களிடமிருந்து தப்பித்து லாரி டிரைவர் ஓடிவிட்டார். தகவல் அறிந்த
ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சோதனையிட்டனர். அதிலிருந்த ஆர்சி புத்தகத்திலிருந்த செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ஆப் செய்யபட்டிருந்தது. இதேபோல் டிரைவர் நம்பரும் கிடைக்கவில்லை. லாரியை டிரைவர் மது அருந்து ஓட்டிவந்ததாக கிராமமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு