×

டிரைவருக்கு கத்திக்குத்து பூ வியாபாரி மீது வழக்கு

திருப்பூர்,ஜூலை23: திருப்பூரில் டிரைவரை கத்தியால் குத்திய பூ வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.திருப்பூர் அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் செல்வக்குமரன் (34). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருப்பூரை சேர்ந்த பூ வியாபாரியான மனோஜ் என்பவர் செல்வக்குமாரின் வீட்டில் பூக்களை கொடுத்து அதை கட்டுவதற்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.இந்நிலையில் செல்வக்குமரனுக்கும், மனோஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் செல்வக்குமரன் தனது உறவினர் தட்சிணாமூர்த்தியுடன் தாராபுரம் ரோட்டில் உள்ள பாரில் மது அருந்திவிட்டு திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனோஜூடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மனோஜ் சிறிய கத்தியால் செல்வக்குமரனை சராமரியாக குத்திவிட்டு தப்பியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்