×

கஞ்சா, லாட்டரி சூதாட்டம் 7 பேர் கைது

திருப்பூர், ஜூலை 23: திருமுருகன் பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வஞ்சிபாளையம், வாய்க்கால் மேடு பகுதியிலுள்ள உணவு விடுதியில் சோதனை நடத்தினர். அந்த உணவு விடுதியில் சூதாடிய முருகானந்தம் (52), சங்கர் (30), அமீர் காஜா (38),மாணிக்கம் (40),கார்த்திகேயன்(48) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 31 ஆயிரத்து 240 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டனர்.திருப்பூர் மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் குளம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த சசிக்குமார் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் வஞ்சிபாளையம் நொய்யல் பாலம் அருகே, தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராமநாதன் (24) என்பவரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு