சென்னை: தமிழக அரசின் சார்பில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் விழா, போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 1,906 லேப்டாப்களும், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2,020 லேப்டாப்களும் என மொத்தம் 3,926 மாணவர்களுக்கு லேப்டாப்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.