×

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக.,வினர் ஓட்டு சேகரிப்பு

ஊட்டி, ஜூலை 23:    வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், திமுக., சார்பில் திமுக., பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தற்போது திமுக.,வினர் முழுவீச்சில் இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்ட திமுக.,விற்கு வாணியம்பாடி நகரம் ஒதுக்கப்பட்டள்ளது.  அப்பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் மற்றும் ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் திமுக.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு முதல் 4வது வார்டு வரை உள்ள 7 பூத்துக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது, தேர்தல் பொறுப்பாளர் ஈரோடு மாவட்ட செயலாளர் முத்துசாமி, நீலகிரி மாவட்ட பொருளாளர் நாசர்லி, குன்னூர் ஒன்றி செயலாளர் பிரேம்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மீனவர் அணி அமைப்பாளர் மகேஷ் உட்பட பலர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு