×

30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

பவானி, ஜூலை 23:  பவானி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மளிகைக் கடைகள், பேக்கரி மற்றும் உணவு விடுதிகளில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் கார்த்திகேயன் கொண்ட குழுவினர் அந்தியூர் பிரிவு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில்  நடத்தப்பட்ட இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்