×

ரெப்கோ ஹோம் பைனான்சில் கடன் வழங்கும் முகாம்

ஈரோடு, ஜூலை 23:  இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்சின், ஈரோடு கிளை மேட்டூர் ரோடு முனிசிபல் காலனியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.இதில் வீடு கட்ட, கட்டிய வீடு வாங்க டி.டி.சி.பி அப்ரூவ்டு வீட்டு மனை வாங்க, வணிக வளாகம் கட்ட மற்றும் என அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு கடன் முன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை ஈரோடு கிளை முதன்மை மேலாளர் மோகன் தலைமை ஏற்று நடத்தினார் . விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவன அதிகாரிகள் கோபிஸ்குமார், ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தி, தினேஷ், திவ்யபிரியா, பிரவீன்குமார், சதீஷ்குமார், திவாகர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.இதில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வீட்டு கடன் வழங்கப்படுகிறது. மேலும் சம்பளதாரர்களுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இம்முகாமில் கடன் முன் அனுமதி கடிதம் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகையாக நிர்வாக மற்றும் பரிசீலனை கட்டணத்தில் 0.75 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை