×

26ல் வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜூலை 23: ஈரோடு மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படும். எனவே, விவசாய சங்க நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...