×

நந்தா தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சங்க துவக்க விழா

ஈரோடு, ஜூலை 23:  ஈரோட்டில் உள்ள நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், கல்லூரி முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஈரோடு துணை மின்பகுப்பு நிலையத்தைச் சேர்ந்த தலைமை செயற்பொறியாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்சாரத்துறையில் செயல் அமைப்பு மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும் பாதுகாப்பு உத்திகள் மற்றும் நேர மேலாண்மை வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் விஸ்வநாதன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார், பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் பேராசிரியர் திருவேங்கடம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...