×

கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மாயம்

சேலம், ஜூலை 23: சேலத்தில் மாயமான கல்லூரி மாணவர் மற்றும் வெள்ளித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி மகேந்திரபுரி பாலாஜி நகரை சேர்ந்தவர் சர்வேஸ்(20). நாமக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 4ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை கல்லூரியில் கட்டுமாறு பணத்தை பெற்றோர் கொடுத்திருந்தனர். ஆனால் பணத்தை கட்டாமல் வைத்திருந்தார். இதனை பார்த்த பெற்றோர் அவரை கண்டித்தனர். அதன்பிறகு கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சேலம் அரியாகவுண்டம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் பழனிசாமி(29). வெள்ளி தொழில் செய்து வருகிறார். கடந்த 18ம்தேதி வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியாததால் அவரது தந்தை வெங்கடாசலம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி தொழிலில் அவர் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் 1 கிலோ வெள்ளி கட்டி வாங்கியது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் மாயமாகியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு