மழை வேண்டி சிறப்பு வழிபாடு

காடையாம்பட்டி, ஜூலை 23: காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள காவப்பட்டறை முனியப்பன் கோயிலில், ஆண்டுதோறும் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்வது வாக்கம். அதேபோல், இந்த ஆண்டும் மழைவேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், ஆடு-கோழி பலியிட்டும் வேண்டுதல் நிறைவேற்றினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காடையாம்பட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழை வேண்டி காவப்பட்டறை முனியப்பன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இப்பூஜையில் கஞ்சநாயக்கன்பட்டி, தும்பிப்பாடி, பூசாரிப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,’ என்றனர்.

Related Stories: