இளம்பிள்ளை, ஜூலை 23: மகுடஞ்சாவடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் காது, கண், மூக்கு, தொண்டை, ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், 600க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி, மருத்துவர்கள் ஈஸ்வரன், புவனேஸ்வரி, திருமாவளவன், சித்த மருத்துவர்கள் ராமு, சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுசீந்திரன் உள்ளிட்டோர் சிகிச்சையளித்தனர். அனைவருக்கும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.