மலைவாழ் மக்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், ஜூலை 23:  ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். வன உரிமை சட்டத்தை ரத்து செய்வதை தடுக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன், சின்னமணி, பாக்கியராஜ், பவளக்கொடி, கம்சலா, தர்மலிங்கம், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: