இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம் ஜூலை 23: சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வேலுதங்கமணியை வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியனர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலுதங்கமணி (33), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார், கடந்த 19ம் தேதி இரவு கடைக்கு வந்த 2 நபர்கள் சரமாரியாக அரிவாள் கொண்டு வெட்டி தப்பினார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வேலுதங்கமணியை வெட்டியவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் நாட்டாண்மை கட்டிடம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சங்கீதா பாலதண்டாயுதம், ஏஜடியூசி மாவட்ட பொதுசெயலாளர் விமலன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: