பூலாம்பட்டியில் 690 மூட்டை பருத்தி ₹15 லட்சத்திற்கு ஏலம்

இடைப்பாடி, ஜூலை 23:  பூலாம்பட்டியில் நடைபெற்ற ஏலத்தில், 690 மூட்டை பருத்தி ₹15 லட்சத்திற்கு விற்பனையானது.சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், பூலாம்பட்டி வடக்கத்திக்காட்டில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், கூடக்கல், குப்பனூர், மூலப்பாறை, சர்வரெட்டியூர், நாவிதன்குட்டை, காட்டூர், வாய்க்கால்பாலம், காசிக்காடு, பில்லுக்குறிச்சி, வெள்ளரிவெள்ளி, சித்தூர் மற்றும் கள்ளுக்கடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 690 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். பின்னர், நடைபெற்ற ஏலத்தில் பிடி ரகம் குவிண்டால் ₹5539 முதல், ₹5869 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் 690 பருத்தி மூட்டை ₹15 லட்சத்திற்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ₹1 முதல் ₹2 வரை கூடுதலாக கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: