தாரமங்கலம், ஜூலை 23: தாரமங்கலத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும். கம்பத்திற்கு காலை-மாலை பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் நாட்டமைக்காரர் இனியன், குப்பு(எ) குணசேகரன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.