×

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ஆதிதமிழர் பேரவை திமுகவிற்கு ஆதரவு

சேந்தமங்கலம், ஜூலை 23:  சேந்தமங்கலம் ஒன்றியம் காளப்பநாயக்கன்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் பேரவை நிறுவனர் அதியமான் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் ஆணவ கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், தமிழகத்தில்  ஆணவ கொலை நடக்கவில்லை என கூறுகின்றனர். நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், ஆதிதமிழர் பேரவை, திமுகவிற்கு ஆதரவு அளிக்கும்,’ என்றார்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா