×

ராசிபுரத்தில் அரசு பள்ளி மாணவர் கிரிக்கெட் பயிற்சிக்கு தேர்வு

ராசிபுரம், ஜூலை 23:  ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவன் ஹசீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு பயிற்சி பள்ளியில்  கிரிக்கெட் பிரிவுக்கு தேர்வாகியுள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் சேர்ந்து, கிரிக்கெட் பயிற்சி பெற்ற படியே படிக்கவும் உள்ளனார். இந்நிலையில் மாணவரை வழியனுப்பும்  நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான உதயக்குமார், அதற்கான ஆணையை மாணவன் ஹசீனிடம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி, சத்தியமூர்த்தி, மற்றும் பள்ளி முதுகலை ஆசிரியர் சௌந்திரராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்