×

அரசு மருத்துவமனையில் கொள்ளையன் எஸ்கேப்

சேலம் ஜூலை 23:நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் கடந்த 20ம் தேதி, 4 முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தின் போது குளிரூட்டும் நிலையத்தில் உள்ள 3 பேர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையர்களில் ஒருவனான தீபக் மீதும் அரிவாள் வெட்டுப்பட்டது. இதையடுத்து, கொள்ளையன் தீபக், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். நேற்று காலை 7 மணியளவில், கொள்ளையன் தீபக், மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்று விட்டான். இந்நிலையில், நேற்று காலை, கொள்ளையன் தீபக், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராசிபுரத்தில் இறங்கிய தீபக்கை, போலீசார் நேற்று காலை 9 மணியளவில் மடக்கி பிடித்தனர். உடனடியாக நாமகிரிபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபக் தலையில் அடிபட்டதால், அவருக்கு முழுமையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி