×

வேப்பனஹள்ளி அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வேப்பனஹள்ளி, ஜூலை 23:  வேப்பனஹள்ளி அருகே, ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா என விவசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள ஓ.என்.கொத்தூர் கிராமத்தின் அருகே உள்ள ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக நேற்று ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குடிப்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் குருபரப்பள்ளி அருகே பீஜே துர்கம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர்(45) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என ஆந்திர மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்