×

தாலுகா அலுவலக சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு

ஓசூர், ஜூலை 23:  ஓசூர் அரசு மருத்துவனை அருகில், தாலுகா அலுவலக சாலையில் பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் குப்பை தொட்டி இல்லாததால், சாலை அருகே கொட்டப்படுகின்றன. இதை கால்நடைகள் கிளறி சாலையில் இழுத்து போடுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு அபாயமும் நிலவுகிறது. எனவே, இந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு ஏதுவாக, குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு