×

கன்றுக்குட்டிகளை திருடியவர் கைது

தர்மபுரி, ஜூலை 23: அரூர் பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணி (40). இவர் சொந்தமாக  மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை மாடுகளின் சத்தம் கேட்டது. இதனால் மணி வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் சென்று பார்த்த போது, அங்கிருந்த  2 கன்று குட்டிகளை திருடிக் கொண்டு வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணி, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த வாலிபரை  துரத்தி பிடித்தார். பின்னர் அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து, அரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அங்கு விசாரணை நடத்தப்பட்டதில், அந்த வாலிபர், அரூர் அடுத்த துறிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்