×

மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரூர், ஜூலை 23: வனஉரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, அரூரில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசின் வனஉரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில குழு ஜெயராமன், பழனிசாமி, சொக்கலிங்கம், முத்து, மல்லையன், ஏழுமலை, கோவிந்தன், தீர்த்தகிரி, பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா