×

பேருந்து மோதி ஏட்டு படுகாயம்

தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தேவூர் ஊத்தப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர்  மாணிக்கம் மகன் கவியரசன்(30). இவர் தர்மபுரி டவுன் காவல்நிலையத்தில் ஏட்டாக  பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியை முடித்துக்கொண்டு, டூவீலரில்  வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதியமான்கோட்டை அரசு பள்ளி எதிரே சாலையை கடந்த போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து இவரது டூவீலர் மீது  பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கவியரசனை மீட்ட அங்கிருந்தவர்கள்,  சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா