சிறுகனூர் அருகே காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்

மண்ணச்சநல்லூர், ஜூலை 23:  சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியில் பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை நேற்று அப்பகுதியில் ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்து சிறுகனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடல் கருகி இறந்து கிடந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். உடலைஎரித்து இரண்டு அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து எரிக்கப்பட்ட பெண் யார்? எனதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: