×

சொந்தமாக தொழில் செய்ய கணவன் பணம் தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

துறையூர், ஜூலை 23: சொந்தமாக தொழில் செய்ய கணவன் பணம் தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.துறையூர் அருகே மதுராபுரி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. அவரது மகன் சக்ரவர்த்தி(40). தச்சுத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(35). இவர்களுக்கு லாவண்யா(13), தர்சன்(11) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். ராஜலட்சுமி சொந்தத் தொழில் செய்வதற்கு கணவரிடம் பணம் கேட்டாராம். ஆனால் சக்ரவர்த்தி பணம் தரவில்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி நேற்று முன்தினம் இரவு சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் சக்ரவர்த்தி எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ