×

இருங்களூர், கொணலை பகுதிகளில் இன்று முதல் தினமும் 2 மணிநேரம் மின்தடை மின்பாதை புதுப்பிக்கும் பணி

திருச்சி, ஜூலை 23: உயர்அழுத்த மின்பாதை புதுப்பிக்கும் பணி காரணமாக சமயபுரம், தச்சங்குறிச்சி துணைமின்நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சமயபுரம் துணைமின்நிலையத்திற்கும் தச்சங்குறிச்சி துணைமின்நிலையத்திற்கும் இடையே உள்ள மின் பாதையில் மின் கோபுரம் மற்றும் உயரழுத்த மின் பாதை புதுப்பிக்கும் பணி இன்று 23ம் தேதி முதல் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம்புதூர், இருங்களூர், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூர், வங்காரம், கன்னியாக்குடி, வலையூர், பாலையூர், பெரும்புதூர் மற்றும் தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் 12மணி வரை என 2 மணிநேரம் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு