மின்பராமரிப்பு காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி, ஜூலை 23: மின்பராமரிப்பு காரணமாக திருச்சி மாநகராட்சி கோட்ட பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண்.1, 2, 3 தரைமட்ட நீர்த்தேக்கதொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ரங்கம் துணை மின்நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (23ம் தேதி) நடக்கிறது. இதனால் ரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான விறகுப்பேட்டை, மகாலெட்சுமி நகர், நேருஜிநகர், அரியமங்கலம், உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தர்நகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைபட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்பிரமணியபுரம், விமானநிலையப்பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த்நகர், சத்யவாணி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட உறையூர் மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போநகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர்பகுதி, எடமலைப்பட்டிபுதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை (24ம் தேதி) வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: