26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூலை 23: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது.திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: