பிரபல சாராய வியாபாரி கைது

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர் புளிமூட்டை (எ) ரங்கநாதன்(63). பிரபல சாராய வியாபாரியான இவர் மதுபாட்டில் விற்பனை செய்து ருவதாகதிருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் ரங்கநாதன் வீட்டின் பின்புறம் கழிவறை தொட்டியில் புதுவையிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 760 புதுவை மதுபாட்டில்களையும், விஷநெடியுடன் கூடிய 5லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: