பாம்பு கடித்து 7ம் வகுப்பு மாணவன் பரிதாப சாவு

மரக்காணம், ஜூலை 23: மரக்காணம் அருகே 7ம் வகுப்பு மாணவன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (48), விவசாயி. இவரது மகன் கணபதி (11), நடுக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த கணபதியை உறவினர்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி இறந்துவிட்டான். இதுகுறித்து அவனது தந்தை அய்யப்பன் கொடுத்த புகாரின்

பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: