அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

ரிஷிவந்தியம், ஜூலை 23: திருக்கோவிலூர்  பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா  திருக்கோவிலூரில் 3 நாட்கள் நடந்தது. விழாவில்  பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பெரியமணியந்தல் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் ராமனுக்கு, சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி மகாதேவன் சான்றிதழ்,பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து  பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில்  தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன் மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். பட்டதாரி  ஆசிரியர்கள் பவுல், விஜயலட்சுமி, அஜிதா சேவியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர்  அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் வினோத்குமார்  நன்றி கூறினார்

Related Stories: