×

மரத்தில் லாரி மோதி தொழிலாளி பலி

வேப்பூர், ஜூலை 23: வேப்பூர் அருகே புளியமரத்தில் லாரிமோதிய விபத்தில் கூலி தொழிலாளி  பலியானார்.
    விழுப்புரம்  மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள. பைத்தந்துறை பகுதியை சேர்ந்த செல்வராசு மகன்  பாண்டிதுரை (வயது 24).  கூலி தொழிலாளியான அவர் ராஜவேல் என்பவரது  லாரியில் நெல் அறுவடை இயந்திரம் வாகனத்தை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்  நேற்று     அதிகாலை  வேப்பூர்- விருத்தாசலம் சாலையில் சென்ற போது வேப்பூர் அருகே உள்ள ராமகிருஷ்ணா பள்ளி பகுதியில் சென்ற போது லாரி டிரைவர் தூங்கியதால் லாரி    தாறுமாறாக ஓடி புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  சம்பவ இடத்திலேயே பாண்டிதுரை இறந்தார். மேலும்,  லாரியில் பயணம் செய்த  மணிகண்டன், லாரி ஓட்டுனர் ராஜவேல் ஆகிய  இருவரும் பலத்த காயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இடிபாடுகளில் சிக்கிய பாண்டிதுரை உடலை மீட்ட வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி