×

மதுபாட்டில் விற்றவர் கைது

பண்ருட்டி, ஜூலை 23:  பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தில் அரசு அனுமதி
யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக புதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு மதுபாட்டில் விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த கோதண்டபாணி(57) என்பவரை கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது