×

ஆம்பூர் அருகே பரிதாபம் கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து தொழிலாளி பலி

ஆம்பூர், ஜூலை 23: ஆம்பூர் அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பாலூர் ஊராட்சி பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(58), கூலித்தொழிலாளி. நேற்று காலை மாதனூர் அடுத்த பாலூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் செல்வராஜ் உட்பட 4 பேர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.காலை 10.30 மணியளவில் கிணற்றின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் செல்வராஜ் சிக்கிக்கொண்டார்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், கிணற்றில் இறங்கி செல்வராஜை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...