தூத்துக்குடியில் நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, ஜூலை 23:  தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி  மாவட்ட நிர்வாகம் சார்பில்,

விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாதம்தோறும்  3வது வியாழக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை  மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை  முன்னிட்டு 3வது வியாழக்கிழமையான ஜூலை 18ம் தேதிக்குப் பதிலாக நாளை மறுதினம் (25ம் தேதி) நடைபெறும். கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தபட்ட தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.   இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: