×

வேம்பாரில் கலை இலக்கிய விழா

குளத்தூர், ஜூலை 23: வேம்பாரில் கலை இலக்கிய விழா நடந்தது.
 குளத்தூர் அருகேயுள்ள வேம்பாரில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி வேம்பார் நாடார் இளையோர் உறவின்முறை சங்கம் சார்பில் கலை இலக்கிய விழா நடத்தப்பட்டது. பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கடற்கரைவேல், நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் ஏசுதாசன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு தலைமை வகித்தனர். சூரங்குடி எஸ்ஐ மாணிக்கராஜ், தேவநேசம் இருதயம்மாள் பாலிடெக்னிக் முதல்வர் கிருபாகரன் ஜோசப், கிராமத் தலைவர்கள் காசிலிங்கம், சவேரியார்பாக்கியம், அழகுவேல், சத்தியநாதன் முன்னிலை வகித்தனர். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற இந்து நாடார் உறவின்முறை துவக்கபள்ளி, புனித பீற்றர் நடுநிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பள்ளி, புனித செபஸ்தியர் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளில்  வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  ஏற்பாடுகளை வேம்பார் நாடார் உறவின்முறை இளையோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு