வெள்ளூர்குளத்தில் மராமத்து பணி

தூத்துக்குடி, ஜூலை 23: வெள்ளூர்குளத்தில் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து  வைகுண்டம் தாலுகா வெள்ளூர் குளத்துப் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர்  அலங்கார தலைமையில் ராஜகோபால் உள்ளிட்ட விவசாயிகள் கலெக்டரிடம் அளித்துள்ள  மனு: வெள்ளூர் குளத்தில் சேதமடைந்த 3  மடைகளை சீரமைத்து குளத்தில் மராமத்துபணி மேற்கொள்ளக்கோரி கடந்த 4 மாதங்களுக்கு  முன்பே மனு அளித்திருந்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனிடையே குளத்தில் தண்ணீர் வற்றி 4 மாதங்களாகி விட்டது. எனவே, இனியும் தாமதிக்காமல் வடமேற்கு பருவ மழைக்கு முன்னதாக போர்க்கால  அடிப்படையில் வெள்ளூர் குளத்தில் மராமத்து பணியை துவங்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: