×

அனந்தபுரி எக்ஸ்பிரசில் போலி டிடிஆர் கைது

தூத்துக்குடி, ஜூலை 23: சென்னையிலிருந்து கோவில்பட்டி வழியாக செல்லும் அனந்தபுரி ரயிலில் நேற்று டிடிஆர் சோதனை நடத்திக்கொண்டிருந்தார். கடம்பூர் ரயில் நிலையம் பகுதியில் வரும்போது ரயிலில் பயணித்த ஒரு வாலிபர் தானும் டிடிஆர் என கூறி ஐடி கார்டை காண்பித்துள்ளார். இதையடுத்து அதனை பரிசோதித்ததில் அது போலி ஐடி கார்டு என்பது தெரியவந்தது. இது குறித்து டிடிஆர், உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தூத்துக்குடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், டிடிஆர் என  கூறி போலியாக பயணித்தவர் நெல்லை மாவட்டம், பணகுடியை சேர்ந்த அய்யனார் மகன் சங்கர் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்