×

திருச்செந்தூரில் கோயில் விடுதி அருகே முதியவர் உடல் மீட்பு

திருச்செந்தூர், ஜூலை 23:  திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான விடுதி ஒன்று உள்ளது. இந்த  விடுதியின் கழிவறை அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று காலை இறந்துகிடந்தார்.
    தகவலறிந்து விரைந்து சென்ற திருக்கோயில் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ரோஸ் கலர் சட்டை அணிந்திருந்த அப்பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். சக பிச்சைக்காரர்களிடம், தனக்கு சொந்த ஊர்  தூத்துக்குடி, பிரையன்ட் நகர் என்றும், மனைவி மற்றும் 4 மகன்கள்  கோவையில் வசிப்பதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் தூத்துக்குடி, பிரையன்ட்  நகருக்கு சென்று போலீசார் விசாரித்ததில் அப்படி ஒரு ஆள் இங்கு இருந்ததே  இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறினர். இதனால் இறந்தவர்  யார்? எந்த  ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்