மினி லாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது

சாத்தான்குளம், ஜூலை 23: சாத்தான்குளம் அருகே மினி லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். சாத்தான்குளம்  எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது  கொம்பங்குளம் பகுதியில் மணல் ஏற்றிவந்த லாரியை தடுத்துநிறுத்தி சோதனையிட்டதில், உரிய  அனுமதியின்றி மணல் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து மினி லாரியை ஓட்டிவந்த தட்டார்மடம் ரஸ்தா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: