தருவைகுளம் சந்தியாகப்பர் ஆலயத்தில் நவநாள் சிறப்பு திருப்பலி

குளத்தூர், ஜூலை 23: தருவைகுளம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.  குளத்தூர் அடுத்த  தருவைகுளம் கடற்கரை பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா  ஆண்டுதோறும் ஜூலை மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 12ம் தேதி வங்கியது. இதையொட்டி திருவிழா நாட்களில் காலை, மாலை  சிறப்பு ஆராதனை, ஜெபமாலை, திருப்பலி  என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த  20ம் தேதி தருவைகுளம் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே தலைமையில் நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து உதவி பங்குத்தந்தை திலகர்ராஜா முன்னிலையில்  ஜெபமாலை ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் திருவிழா நிறைவாக  சிறப்பு திருப்பலியை தொடர்ந்து கண்கவர் வாண வேடிக்கை நடந்தது. விழாவில் திரளாகப் பங்கேற்ற கிறிஸ்த மக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: