அம்மன்புரம் குளத்தில் குப்பை கொட்டிய மினிலாரி சிறைபிடிப்பு

திருச்செந்தூர், ஜூலை 23: அம்மன்புரம் குளத்தில் குப்பையை கொட்டிய மினிலாரியை கிராம மக்கள் சிறைபிடித்ததனர். குரும்பூர் அருகே அம்மன்புரம் சீனிமாவடிகுளத்தில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் மினிலாரியில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டி சென்றனர். இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள், மர்மநபர்களைத் தேடி வந்த நிலையில் நேற்று குரும்பூரில் இருந்து குப்பைகள் ஏற்றிவந்த மினிலாரி ஒன்று, அம்மன்புரம் குளத்தின் மையப் பகுதியில் குப்பைகளை கொட்டத்துவங்கியது. இதுகுறித்து தெரியவந்ததும் அங்கு திரண்டுசென்ற குரங்கன்தட்டை கிராம மக்கள், மினிலாரியை சிறைபிடித்தனர். பொதுமக்கள் வருவதை கண்டு பதறிய டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்து விரைந்து வந்த குரும்பூர் போலீசார் சமரசப்படுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: