வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

தூத்துக்குடி, ஜூலை 23: வேலூர்  மக்களவைத் தொகுதி தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை வகித்துப் பேசியதாவது:  ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தெற்கு மாவட்ட கழகத்திற்கு  கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்தொகுதியில் நாம் அல்லும்பகலும் அயராது பணியாற்றி வெற்றிக்கனியை முதல்வர், துணை முதல்வரிடம் ஒப்படைப்போம். இதற்கான களப்பணிக்கு 24ம் தேதி செல்ல உள்ளோம். இப்பணியில் கட்சியினர் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர்  அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், செங்கான், ஆறுமுகநயினார், சவுந்தரபாண்டி,  ராஜ்நாராயணன், முன்னாள் நகரச் செயலாளர் ஏசாதுரை, பகுதி செயலாளர்கள்  பொன்ராஜ், ராமகிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் நடராஜன், விவசாய  பிரிவு அக்ரி பெருமாள், அண்ணா தொழிற்சங்கத்தின் டேக் ராஜா, பேரூர் செயலாளர்கள் காசிராஜன், மகேந்திரன், அரசகுரு, செந்தில்ராஜகுமார், ராஜா,  மகாதேவன், ஜெயகண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாத்துரை பாண்டியன்,  ஜான்சி, தலைமைக்கழக பேச்சாளர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்  செயலளார் சத்யா லட்சுமணன்,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் வீரபாகு,  வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் செல்வக்குமார், இணைச் செயலளார்  சுகந்தன் ஆதித்தன், மீளவிட்டான் சுதாகர், அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர்  சந்திரராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு பொருளாளர் வேல்பாண்டி,  நகர புறநகர் பிரிவு நிர்வாகிகள் கல்வி குமார், தொப்பை கணபதி, பொன்னம்பலம்,  லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: