×

மன்னார்குடியில் நாளை நடக்கிறது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மன்னார்குடி, ஜூலை 23:மன்னார்குடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய மன்னார்குடி செயற் பொறியாளர் ராதிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மன்னார்குடி கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை ( புதன் கிழமை ) காலை 10 மணியளவில் மன்னார்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மன்னார்குடி கோட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி, வடுவூர், உள் ளிக்கோட்டை , பரவாக்கோட்டை, திருமக் கோட்டை , நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மின்சார வாரியம் சம்பந்தமான தங்களின் குறைகளை நேரில் வந்து தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் செயற்பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...