×

மணல் கடத்திய 2 பேர் கைது

திருவாரூர், ஜூலை 23: திருவாரூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஊர்குடி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றினை மடக்கி சோதனை செய்தபோது அதில் எவ்வித உரிமமும் இல்லாமல் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த வளவநல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (32) என்பவரை கைது செய்தனர். இதேபோல் எஸ்ஐ ஜோஸ்பின் சித்தாரா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அம்மையப்பன் அருகே ஓடம் போக்கி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் திருடிய அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் ( 34 )என்பவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...