×

மாதர் சம்மேளன பேரவையில் வலியுறுத்தல் கட்டிமேடுஅரசு பள்ளியில் கணிதமன்றம் துவக்க விழா

திருத்துறைப்பூண்டி, ஜூலை23: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதமன்றம் துவக்கவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.தலைமையாசிரியர் பாலு தலைமைதாங்கினார்.. பூண்டி புஷ்பம் கலைக் கல்லூரியின் கணிதத் துறை உதவி பேராசிரியர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் அப்துல் முனாப், பொருளாளர் பக்கிரிசாமி, உட்படபலர் பேசினர்.நிகழ்ச்சியில் கணிதம் கற்றால் வாழ்வு எளிதாகும் என்றதலைப்பில் நாடகம் நடைபெற்றது பின்னர் கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியைவினோதினி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்